மரம் வெட்டும் அனுமதியை ரத்து செய்த கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணையில் பேபி அணைக்கு கீழே 15 மரங்களை வெட்டுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை  ரத்து செய்வதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பேபி அணையை வலுப்படுத்த இடையூறாக இருந்த மரங்களை வெட்ட தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதற்கு அனுமதி அளித்து கேரள முதலமைச்சர் தகவல் தெரிவித்தார். இதற்கு முக ஸ்டாலினும் நன்றி கடிதம் அனுப்பினார். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் பேபி அணைக்கு கீழே 15 மரங்களை வெட்டுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை  ரத்து செய்வதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அனுமதி வழங்கிய வனத்துறை அலுவலர்களால் தவறு நடந்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!