குட்கா முறைகேடு – முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மீது வழக்கு பதிவு

குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

மாநில அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என்ற அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லி சிபிஐ பிரிவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பி வி ரமணா முன்னாள் டி ஜி பி டி கே ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட குட்கா முறைகேடு தொடர்பாக லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தொடர்புடைய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்ததன் அடிப்படையில் கடிதம் அனுப்பியுள்ளது.

Translate »
error: Content is protected !!