சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

Translate »
error: Content is protected !!