வோடபோன் ஐடியா நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு…

தொலைதொடர்பு துறையில் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கையை தொடர்ந்து, வோடபோன் ஐடியா நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடன் சுமையில் உள்ள ‘வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக குமார் மங்கலம் பிர்லா சமீபத்தில் தெரிவித்திருந்தது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தொலை தொடர்பு நிறுவனங்களை மீட்டெடுக்கும் வகையில் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்த 4 ஆண்டு காலம் அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கடன் சுமையில் சிக்கி தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய குமார் மங்கலம்  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!