ஐ.ஐ.டி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கிங்சோ தேப்சர்மா நேரில் ஆஜராக 2 வாரம் அவகாசம் கோாியுள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர் கடந்த 2017-ல் சென்னை ஐ.ஐ.டி-யில் படித்த போது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மேற்குவங்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ தேப்சர்மாவை கைது செய்தனர். இருப்பினும் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருந்ததால் மாணவர் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தற்போது அவகாசம் கோரியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!