பேச்சிப்பாறை அணையில் நீர் வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக 48- அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 45.7 அடியாக உயர்ந்ததாலும் அணைக்கு வினாடிக்கு 1300 கன அடி நீர் வந்துகொண்டு இருப்பதாலும் நேற்று மாலை அணையில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்ய துவங்கியது. இந்த உபரிநீர் இன்றும் அதே அளவில் வெளியேற்றம் செய்து வருகிறது. இதனால் கோதையார், திற்பரப்பு நீர் வீழ்ச்சி, தாமிரபரணி ஆறு ஆகிய ஆறு மற்றும் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் நேற்று முதலே தடை விதித்துள்ளது. தாமிரபரணி ஆறு மற்றும் கோதையாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!