இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழா

75வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251 வது நினைவு தினத்தை முன்னிட்டும், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சல் தலையை வெளியிடுகிறார். புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அஞ்சல் தலையை பெற்றுக் கொள்கிறார்.

இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக சுற்றுலாத்துறை, அமைச்சர் மதிவேந்தன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன் மற்றும்  தலைமை தபால் துறை தலைவர் ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Translate »
error: Content is protected !!