ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பலிடம் விசாரணை

ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பலிடம் விசாரிக்க 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆன்லைன் லோன் மோசடி தொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த 4 பேரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரை 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

Work from home என்ற அடிப்படையில் இந்த கும்பல் மோசடியில் ஈடுபடுவது எப்படி? இந்த கும்பலை இயக்குவது யார் என்ற அடிப்படையில் விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இந்த மோசடி கும்பல் தொடர்புடைய 47 வங்கி கணக்கை முடக்க கடிதம் எழுதி இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!