ஆப்கானிஸ்தான் விவகாரம்: சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

ஆப்கானிஸ்தான் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நியூயார்க்கில் ஐநா பொது சபை கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், தென் கொரியா, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் அமைச்சர்களை சந்தித்து, இந்தியாவுடனான உறவினை வலுப்படுத்துவது குறித்த முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டார். அப்போது இத்தாலி அமைச்சரும், ஜி20 மாநாட்டு தலைவருமான லூகி டீ மயோவுடன் தடுப்பூசி குறித்தும், கொரோனாவுக்கு பின் பயணிகள் எதிர்கொள்ளும் பயண சவால்கள் குறித்தும் விவாதித்ததாக, ஜெய்சங்கர் தனது  டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!