மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் அருள்மிகு ஸ்ரீசைந்தவமுனிவர் கருப்பசாமி மற்றும் திரவுபதி அம்மன் திருக்கோவில் திருவிழாவை  முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 600 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும்  ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காண்கின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் பேரையூர் டிஎஸ்பி சரோஜா முன்னிலையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டு உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என யாருக்காவது காயம் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து. பலத்த காயம் ஏற்பட்டால் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 3 அவசர ஊர்தி (108 ஆம்புலன்ஸ்) தயாராக உள்ளது இரண்டு கால்நடை அவசர ஊர்தி தயாராக உள்ளது.

மேலும் போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்துக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் நல்ல மரம் ஜல்லிக்கட்டு விழாவில் துள்ளி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி, திருவிழாவை உற்ச்சாகத்துடன் கொண்டடுகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!