ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 272 உயர்வு

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 272 உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 884 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை 4 ஆயிரத்து 850 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 34 ரூபாய் உயர்ந்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 272 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து 68 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையாகிறது.

 

Translate »
error: Content is protected !!