கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார் குற்றச்சாட்டு

பஜ்ரங்தள் நிர்வாகி கொலை வழக்கில், கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா சம்பந்தமின்றி முட்டாள்தனமாக பேசுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மூவர்ண கொடி குறித்த சிவகுமாரின் தூண்டுதல் பேச்சாலேயே, இஸ்லாமிய குண்டர்கள் பஜ்ரங்தள் அமைப்பு நிர்வாகியை படுகொலை செய்ததாக அமைச்சர் ஈஸ்வரப்பா சர்ச்சை கருத்து தெரிவித்தார். இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிவகுமார், அமைச்சர் ஈஸ்வரப்பா முட்டாள் தனமாக பேசுவதாக குறிப்பிட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிந்து பாஜக அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்திய அவர், காவிக்கொடி விவகாரத்தில் பாஜக அமைதி காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Translate »
error: Content is protected !!