என் கணவன் எங்கே – நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தி மீது பெண் பரபரப்பு புகார்

என் கணவன் எங்கே? எங்கு அடைத்து வைத்துள்ளீர்கள்? என்று ரஜினிகாந்த் சம்பந்தி மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சௌந்தர்யா. இவர், விசாகன் என்ற தொழிலதிபரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். விசாகனின் தந்தை வணங்காமுடி.

இவர், அபெக்ஸ் லேபரட்டரி என்ற பிரபல நிறுவனத்தின் உரிமையாளராவார். இந்நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரர் முரளி ஸ்ரீனிவாசன். இவர், இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், முரளி சீனிவாசனின் 2-வது மனைவி எனக்கூறி சத்தியபாமா என்பவர் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், முரளி சீனிவாசனின் 2-வது மனைவியாக ரகசியமாக வாழ்ந்து வருகிறேன். தனக்கும் முரளி சீனிவாசனுக்கும் 8 மாத குழந்தை ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன்பு எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதற்காக ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமான நிலையில் தனது கணவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை.

இதனால், பங்குதாரராக இருக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் வணங்காமுடி மற்றும் தனது கணவரின் முதல் மனைவி ஆகியோரிடம் முரளி சீனிவாசனின் 2-வது மனைவி என்ற உண்மையை தெரிவித்தேன். தன் கணவரின் உடல்நிலை பற்றி விசாரிக்க தனது கணவரின் முதல் மனைவியின் வீட்டிற்கு சென்றேன். அப்போது தன்னை வீட்டிலிருந்து அடித்துத் துரத்தினர். நிறுவனத்தின் உரிமையாளர் வணங்காமுடியிடம் கேட்டேன். அப்போது, உதவுவதாக தெரிவித்து விட்டு பின்னர் வழக்கறிஞர் ஒருவர் மூலமாக மிரட்டுகிறார். தனது கணவர் முரளி சீனிவாசனை சொத்துக்காகவோ அல்லது ரகசிய ஆவணங்களை பெறுவதற்காக வணங்காமுடி அடைத்து வைத்துள்ளார். மேலும், தன் கணவரை எங்கு வைத்துள்ளார்கள் என்ற தகவலும் தெரிவிக்க மறுக்கிறார்கள். தன் கணவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி எனக்கு தெரிய வேண்டும். தன்னை மிரட்டும் வணங்காமுடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினிகாந்தின் சம்பந்தியான வணங்காமுடியை பற்றி எந்த ரகசியமும் தன் கணவர் என்னிடம் கூறவில்லை. தனக்கும் என் குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!