லக்கிம்பூர் வன்முறை- ஆஷிஸ் மிஸ்ரா அதிரடியாக கைது

லக்கிம்பூர் வன்முறை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறையில், 4 விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா தான் காரணம் என்பதால் அவரை கைது செய்யக்கோரி கோரிக்கை வலுத்தது.

இதனையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. பின்னர் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் போலீசார் 10 மணி நேரத்திற்கும் விசாரணை நடத்தி, பின்னர் கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!