பட்டாசு விற்பனையாளர்களுக்கு லைசன்ஸ்: முதல்வருக்கு கோரிக்கை

ஆவடி அடுத்த பட்டாபிராமில் ஆலடி பட்டியான் கருப்பட்டி டீக்கடையின் 28 வது கிளை துவக்க விழாவிற்கு பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் வணிகர் சங்கத் தலைவர் விக்ரம் ராஜா தென்காசி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் பழனி நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கத் தலைவர் விக்ரம் ராஜா,
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைத்தார்.

அதில் இரண்டு ஆண்டு காலமாக கொரோனா காலத்தில் வணிகம் என்பது மிகவும் கடுமையாக நசுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த ஆண்டு சற்று தலை தூக்கி இருப்பதாகவும் பட்டாசு விற்பனையாளர்களுக்கு லைசன்ஸ் கொடுப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு உடனடியாக லைசன்ஸ் வழங்க வேண்டும் என்றும் வணிக பேரவை சார்பாக கேட்டுக் கொண்டார்.

Translate »
error: Content is protected !!