நாளை முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல்… தீவிர பணியில் தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை  நடைபெறும் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி  தேர்தல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி உள்ளாட்சி  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக  தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை  நடைபெறுவதால் அதற்கான பிரச்சாரம் நேற்று  மாலை 5 மணியுடன்  நிறைவடைந்தது.  இதனிடையே 12,252 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நாளை  முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், வெளியூரை சேர்ந்தவர்கள் அந்தந்த பஞ்சாயத்துகளில் இருந்து வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!