நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்…

சென்னையில் நாளை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விசு மகாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கே. கே. நகர் சிவன் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விசு மகாஜன், காவல் துறையினர் இணைந்து முக கவசம் அணியாதவர்களிடம் அபாரதம் வசூலித்தனர்/ பின்னர் முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மகாஜன், சென்னையில் நாளை மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்றார். 200வார்டுகளில் 1,600 முகாம்கள் நடத்தப்படுவதால், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு தடுப்பூசிசெலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

 

Translate »
error: Content is protected !!