வேட்டை இனிமேதான் – எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர்பாபு

கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும் என் அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் மற்றும் ஆதி மொட்டையம்மன் கோயில் குளம் ஆகிய இடங்களில் இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய அவர், “400 ஆண்டுகளுக்குமேல் பழமையான இந்த கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான தண்ணீர் ஆகியவை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும். கோயில் வளாகத்திற்கு உள்ளாகவே திருத்தேர் உலா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் குயின்ஸ்லேண்ட் விவகாரத்தில் இடத்தின் உரிமையாளரிடம் சமரசம் செய்ய இது ஒன்றும் பஞ்சாயத்து அரசு இல்லை என்று தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!