உள்ளாட்சி தேர்தல்: பறக்கும் படை சோதனையில் பணம் பறிமுதல்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் கணக்கில் வராத வெள்ளிப்பொருட்கள் மற்றும்  பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்- திருவண்ணாமலை செல்லும் சாலையில் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு  தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த தனி வட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையில்  காவல்  சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கர், தலைமை காவலர் குமரன், செந்தில் ஆகியோர்கள் சகிதம்  வாகன சோதனை செய்த போது  சங்கராபுரம் நகரத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரி  செல்வராஜ்  மகன் சரவணன் வ-35 என்பவர் திருவண்ணாமலை நோக்கிசென்று கொண்டிருந்தார்.

அப்போது பறக்கும் படையினர்  நிறுத்தி சோதனை செய்த போது கணக்கில்லாமல் வைத்திருந்த ரூ- 57000/- பணம் மற்றும் புது வெள்ளி நகைகள் கால் கொலுசு, காப்பு, கைச்செயின் வெள்ளி பொருட்கள் மொத்தம் 6 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டு சங்கராபுரம் ஒன்றியம் தேர்தல் நடத்தும் அலுவலர்  ராஜேந்திரன்  ஒப்படைத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!