தனி நீதிபதி விசாரணை முடியும் வரை தடை தொடரும்

 

நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீட்டிக்கப்படுகிறது என்று தேசிய தேர்வு முகமை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வழக்கை விசாரிக்க  சிபிசிஐடி போலீசுக்கு கடந்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை தனி நீதிபதியே பிரதான மனு மீது மீண்டும் விசாரித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!