புதிய நீதிபதிகள் இன்று மாலை பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்ரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபீக் ஆகியோர் இன்று பதவியேற்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75. தற்போது, தலைமை நீதிபதியுடன் சேர்த்து 56 நீதிபதிகள் உள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நான்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம்,  சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்ரவர்த்தி,  விஜயகுமார், முகமது ஷபிக் ஆகிய நான்கு பேரும் இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.

Translate »
error: Content is protected !!