மறைமுக தேர்தல் வேண்டாம்- எம்.பி திருமா கோரிக்கை

வரும்காலங்களில் மறைமுக தேர்தல் இல்லாமல், மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளதாக எம்.பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், விசிக சார்பில் துணை மேயர், துணைத்தலைவராக தேந்தெடுக்கப்பட்டவர்களுடன் வந்த வந்த எம்.பி திருமாவளவன், முதலைமைசர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைமுக தேர்தலில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து முதலமைச்சரின் கவனித்திற்கு கொண்டு சென்றோம் என்றார். மேலும் கூட்டணி நலன் முக்கியமானது, அது தான் மக்களிடையே வெகுமதிப்பை பெற்றுள்ளது என்பதால் குளறுபடி குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையே தங்களுக்கு ஆறுதலை அளித்திருப்பதாக கூறிய அவர், வரும்காலங்களில் மறைமுக தேர்தல் இல்லாமல், மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!