இசையமைப்பாளர் இளையராஜா பேசிய கருத்தை யாரும் விமர்சிக்க வேண்டாம் – முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பணியாளர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக ரூ.11.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி உள்விளையாட்டு அரங்கம் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மழைக்காலங்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் புதிதாக ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்ட வளைய சுற்றுத்தர அமைப்புகளை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

பின்பு உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

நான் எனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் மட்டுமில்லை, தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன் எனவும், என்னைவிட தலைவர் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார் எனவும், பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு பேசியது இளையராஜாவின் சொந்த கருத்து எனவும், இந்த விவகாரத்தில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என்று தலைவர் சொல்லிவிட்டார எனவும், ஆகையால் அவருடைய கருத்தை நாகரீகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் தவறுதான் எனவும் கூறினார்.

 

 

Translate »
error: Content is protected !!