மாணவன் உயிரிழந்தது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்

 

சென்னை வளசரவாக்கத்தில் 7 வயது பள்ளி மாணவன் உயிரிழந்தது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயதுடைய தீக்ஷித் என்ற மாணவன் கடந்த 28-ம் தேதி பள்ளி வாகனம் மோதி உயிரிழந்தான்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வாகன ஓட்டுநர் பூங்காவனம் பணிப்பெண் ஞானசக்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், விபத்து தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இரண்டு நாட்களுக்குள் பள்ளியின் தாளாளர் அல்லது முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!