ஓ.பி.எஸ். அதிமுகவின் பொருளாளர் மட்டுமே…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்றுடன் காலாவதியானது

ஓ பன்னீர்செல்வம் தற்போதைய அதிமுகவின் பொருளாளர் பதவியில் மட்டுமே இருக்கிறார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அதில் தேர்வு செய்யப்பட்ட அவைத்தலைவர் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் கூறிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் கருத்து அதிமுக வட்டாரத்தில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து சென்னை பசுமை வழி சாலை யில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி ஜெயக்குமார் தங்கமணி சி விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்  , நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 2665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்றும் நீதிமன்ற அறிவுறுத்தல்படி முறைப்படி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அரங்கிற்கு வந்தவர் வைத்திலிங்கம் தான் என‌குற்றம் சாட்டி பேசிய அவர் 2021 டிசம்பர் 1ஆம் தேதி கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்ட சட்டவிதிகள் நேற்று பொதுக்குழுவில் முன்வைக்கப்படாததால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்றுடன் காலாவதியாகிவிட்டது.

தற்போது கழகத்தின் பொருளாளர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமை நிலை செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை நினைவு படுத்துவதாக கூறினார். கழக விதி 19 மற்றும் 5 ஆம் பிரிவின்படி அவைத்தலைவர் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மேலும் முறையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக நேற்று பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இதில் சட்ட விதி மீறல்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அதன் பின்னர் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதத்தை அவரிடம் வழங்கியதன் அடிப்படையில் அடுத்து பொதுக்குழு கூட்ட தேதி அறிவிக்கப்பட்டது  என்றும் கூறினார்

தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து பேசிய  முதலமைச்சர் அவர்களின் கருத்திற்கு பதிலளித்து பேசிய அவர் ,திமுக என்பது வாரிசு அரசு என்றும் அதிமுகவை பற்றி விமர்சிப்பதற்கு முதலமைச்சருக்கு எந்த தகுதியும் இல்லை முதலமைச்சர் உங்களுக்கும் கூடிய விரைவில் நேரம் வரும் என்றும் உங்களது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது திமுகவில் எந்த பிரச்சனையும் வராமல் போய் விடுமோ என்று நாங்கள் பார்க்கப் தான் போகிறோம் ,உட்கட்சி பிரச்சினையைக் கண்டு சந்தோஷம் அடைய வேண்டாம் என ஆவேசத்துடன் பேசினார்.

Translate »
error: Content is protected !!