இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்- ஒரு விக்கெட் கூட இழக்காமல் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றில், இந்திய அணி தமது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தியது. துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் இருவரும், அதிரடியாக விளையாடி 17 புள்ளி 5 ஓவரில் பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

Translate »
error: Content is protected !!