நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

 

எதிர்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட வழக்காரம் பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் மீண்டும் அவை கூடும் போதும் உறுப்பினர்கள் அமளி நீடித்தது. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!