மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது பாராட்டுக்குரியது – பில்கேட்ஸ் பெருமிதம்

இந்தியா டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கொரோனா பெருந்தொற்று குறித்துப் பேசினார். அதில் உலகம் முழுவதிலும்  உள்ள நாடுகள் எவ்வாறு இந்தப் பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடியிருந்தார். அதில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர், தொலைத்தொடர்புகளுக்கு அப்பால் இருக்கும் கிராமங்கள்கூட கோவிட் பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆதார் போன்ற டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.

Translate »
error: Content is protected !!