தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம்

 

தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டத்தை நாளை தொடக்கி வைக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், பிரேசிலில் நடைபெற்ற கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் 3 பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை ஜெர்லின் அனிகா சாதனை படைத்துள்ளார். அதேபோல் டென்னிஸ் பிரிவில் விளையாடிய ப்ரித்வி சேகர் பதக்கம் வென்றுள்ளார். இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டி ஊக்கத் தொகை வழங்கினார் என்றார்.

எதிர்காலத்தில் பங்குபெறும் அனைத்துப் போட்டிகளுக்கும் என்னென்ன உதவிகள் தேவையோ அரசின் சார்பாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்  தெரிவித்ததாகவும்,  செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது என்று அமைச்சர்,  ஜூலை 15க்குள் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் மஞ்சபை என்ற திட்டத்தை விரிவாக்கும் விதமாக தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் நாளை தொடக்கி வைக்கப்பட உள்ளதாகவும்,  விரைவில் பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் இந்த திட்டம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!