கேரளாவில் CUET இளநிலை தேர்வு ஒத்திவைப்பு

கேரளாவில் அதிகனமழை கொட்டி தீர்த்து வருவதால் CUET இளநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு CUET தேர்வு நடத்தப்படுகிறது.

கேரளாவில் CUET இளநிலை தேர்வு நேற்று தொடங்கி நாளை வரை நடைபெற இருந்தது. இந்தநிலையில் அங்கு கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக, மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களுக்கு வர முடியாத நிலை காணப்பட்டது.

இதையடுத்து தேர்வர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், மாற்று தேதி விவரம் பின்னர் வெளியிடப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!