அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்…

அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து என இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுகால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 20 வயதுக்குள் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், குரல் வளம், உடல் வளம் உடையவர்கள், சமய தீட்சை பெற்றவர்கள், சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் தகுதியானவர்கள் அக்டோபர் 27-ம் தேதிக்குள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் செயல் அலுவலருக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!