பஞ்சாப் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி

பல்வேறு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் துடைத்தெரியப்பட்டு விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இதனை குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் மறக்கடிக்கப்பட்டதாக கூறிய அவர், இதற்கு வரலாறே சாட்சி என்றும், தங்களது ஆட்சியில் தான் சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரை செயல்படுத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும் பஞ்சாபில் மாபியா கும்பலின் ஆட்சியை ஒழிக்க பாஜகவிற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்ட அவர், . டெல்லி, பீகார் மக்களை முதல்வர் சரண்ஜித் சிங் இழிவுப்படுத்தி விட்டதாகவும் அப்போது தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!