பஞ்சாப் முதல்வரின் மருமகன் வீட்டில் ரெய்டு

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் மருமகன் வீட்டில்  அமலாக்கத்துறையினர்  அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். பஞ்சாபில் அமரிந்தர் சிங் முதல்வராக இருந்தபோது, அங்கு நடைபெற்ற, மணல் கொள்ளை, சுரங்க ஊழல் ஆகிய வழக்குகளை விசாரிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து வலியுறுத்தி வந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை அதிரடியாக முதல்வர் சரண்ஜித் சிங் மருமகன் பூபேந்தர் சிங் ஹனியின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது ஊழல் தொடர்பாக பஞ்சாபில் மேலும் 10 இடங்களில் சோதனை நடைபெற்றதாகவும், இதில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது உறுதியானதை அடுத்து, அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்கு பதிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது…

Translate »
error: Content is protected !!