புதுக்கட்சி துவங்குகிறார் பஞ். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும்,  அம்மாநில காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துக்கும் இடையே மோதல் போக்கு நடைபெற்று வந்தது. இதனால் அமரீந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!