உற்சாகத்துடன் நடிகர் ரஜினிகாந்தை டெல்லிக்கு வழியனுப்பிய ரசிகர்கள்

டெல்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த்,தனுஷ்,விஜய்சேதுபதி ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். தேசிய திரைப்பட விழா வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த விருது விழாவில் நடிகர் ரஜினிக்கு இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்க்கு 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று காலை சென்னை விமானத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். முன்னதாக விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பி வழியனுப்பி வைத்தனர்.

Translate »
error: Content is protected !!