மீட்கப்பட்ட கோவில் நிலங்களின் விவரங்கள் இணையத்தில் வெளியீடு

மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு என்பது குறித்து பொதுமக்கள் பார்வையிட இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை 100க்கும் அதிகான திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுபோன்று மீட்கப்பட்ட நிலங்கள் குறித்தும் அதன் விவரங்கள் குறித்தும் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக அதன் விவரங்களை இந்து சமய அறநிலைத்துறை இணையதளத்தில் வெளியிட்டது. https://hrce.tn.gov.in/hrcehome/landretrieval_search.php இணையதளம் சென்று பொதுமக்கள் கோயில் நிலம் மீட்பு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!