வெளியானது உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் சென்னை காசி திரையரங்கில் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதனையொட்டி உதயநிதி ரசிகர்கள் மேல் தாளம் முழங்க சிலம்பாட்டம் மற்றும் சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் உதயநிதி கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்தும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் பாபு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் பாபு, 2 வருடங்கள் கழித்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைப்படம் வெளியாகியுள்ளது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் சமூக நீதியை தனது இதயத்தில் ஏந்தி மக்களுக்காக பாடுபடும் படமாக நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அமையும் என கூறினார்.

Translate »
error: Content is protected !!