வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா தொற்று பரவும் அபாயம்

 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 70 வார்டுகளில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு எண்ணும் மையமான குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அனைத்துக் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்து வந்ததால், அப்பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதலாவதாக தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டு, பின்பு மற்ற வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!