புதிய ஆளுனராக இன்று பதவி ஏற்கிறார் ஆர்.என்.ரவி

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழகத்தின் புதிய ஆளுனராக நாகாலாந்து மாநிலஆளுனர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் நேற்றுமுன்தினம் இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என். ரவி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Translate »
error: Content is protected !!