சுற்றுப்பயணம் புறப்பட்டார் சசிகலா

தமிழகம் தலை நிமிரவும், திமுக தலைமையிலான அரசின் அராஜக செயல்களை தடுத்து நிறுத்திட, பெண்ணினத்தின் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தி சசிகலா சுற்றுபயணம் செல்கிறார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு கிண்டி, கத்திபாரா மேம்பாலம், போரூர் வழியாக பூந்தமல்லி செல்கிறார்.

அங்கு இருந்து குமணன்சாவடியில் சென்று அங்கு இருந்து சுற்று பயணத்தை தொடங்கும் சசிகலா திருமழிசை, வெள்ளவேடு, பாக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தொண்டர்களையும்
பொதுமக்களையும் சந்திக்கிறார். ஒருபுறம் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கி வரும் நிலையில் சசிகலா கடந்த இரண்டு வாரங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்க திருத்தணி சென்ற சசிகலா இரண்டாவது முறையாக மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மேலும், அடுத்ததாக வரும் ஜூலை 5 ஆம் தேதி திண்டிவனம், ஜூலை 7 ஆம் தேதி வானூர், ஜூலை 8 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை என தொடர் சுற்றுப் பயணங்களை சசிகலா திட்டமிட்டுள்ளார்.

இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நான்கு இடங்களில் ஏதோ ஒரு இடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு அல்லது தொண்டர்கள் மத்தியில் பேச இருக்கிறார்.

Translate »
error: Content is protected !!