சசிகலா தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும்….


 

ஓபிஎஸ் இபிஎஸ் இருவருமே தலைமைக்கு தகுதி இல்லாதவர்கள் சசிகலா தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என திநகரில் உள்ள சசிகலா இல்லத்தின் முன்பு 30க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கோஷம்

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தான் என்றும் கழகத்தின் காவல் தெய்வம் சசிகலா தான் என்று கோசமிட்டனர்.  அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில் நேற்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல், ஒற்றை தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக் குழுக் கூட்டமானது வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக அவை தலைவர் அறிவித்தார்.

முட்டை தலைமைக்கு தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மீட்டு பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதை கண்டித்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுக் கூட்டத்தை வெளிநடப்பு செய்தனர்.

,அதிமுகவில் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் இந்த ஒற்றை தலைமை பிரச்சனை தற்போது வரை ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், ஓபிஎஸ் இபிஎஸ் இருவருமே தலைமைக்கு தகுதி இல்லாதவர்கள் சசிகலா தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என 30க்கும் மேற்பட்ட அமமுக தொண்டர்கள் சென்னை தி நகரில் உள்ள சசிகலா இல்லத்தின் முன்பு என கோஷம் எழுப்பினர்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான் என்றும் உடனடியாக பொது செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் கழகத்தை அவரால் மட்டுமே காக்க முடியும் என்றும் தொடர்ந்து கோசங்களை எழுப்பி வந்தனர்.

Translate »
error: Content is protected !!