விமானத்தின் கழிவறையிலிருந்த தங்கக்கட்டிகள் பறிமுதல்

 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து கொண்டு இருந்தனர்.

அப்போது துபாயில் இருந்து விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின் விமானத்திற்குள் ஏறிய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். விமான இருக்கை அடியில் சோதனை செய்த போது எதுவும் இல்லை. பின்னர் விமான கழிவறையில் சோதனை செய்தனர். அப்போது கழிவறையில் இருந்த பெட்டிக்குள் மர்ம பார்சல் இருந்ததை  கண்டனர். அந்த பார்சலை பிரித்து பார்த்த போது தங்க கட்டிகள் இருந்தன. அதுப்போல் பன்னாட்டு முனைய வருகை பகுதியில் உள்ள கழிவறையிலும் ஒரு மர்ம பார்சலை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்த போது அதில் தங்கம் இருந்ததை கண்டனர்.

ஒரே நாளில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விமான கழிவறையில்  இருந்து ரூ. 4 கோடியே 21லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த கும்பல் விமான கழிவறை மற்றும் விமான நிலைய கழிவறையில் போட்டு சென்றதாக தெரிகிறது.

இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்தது யார்? கழிவறையில் போட்டு சென்றது யார்?  கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!