ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி

போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ஆர்யன் கானிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், நேற்றுடன் நான்கு நாட்கள் முடிவடைந்த நிலையில், ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது மேலும் சில நாட்கள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்காத நீதிபதிகள், ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!