அசுத்தமான குடிநீரை குடித்த பொதுமக்கள் 6 பேர் பலி

கர்நாடகாவில் அசுத்தமான குடிநீரைக் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹூவினஹடகளி தாலுகாவில் உள்ள மகரப்பி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறுகளுக்கு புதிய குழாய் பதிக்கும் போது, ​​பழைய குழாய்கள் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கழிவுநீர் கலந்த குடிநீரையே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த நீரை குடித்த பலருக்கு வாந்தி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!