போலீசார் மீது கல்லெறி தாக்குதல் – 10 பேர் கைது…

டெல்லியில், காவல்துறை வாகனம் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை மோதவிட்டு உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக டெல்லி, அரியானா உள்ளிட்ட  அண்டை மாநிலங்களிலும்  கலவரமான சூழல் காணப்படுகிறது. இதையடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள ஷாதரா பகுதியில் இரவு ரோந்து பணிக்கு சென்ற காவல் வாகனம் மீது மர்ம நபர்கள் கல்லெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், கல்லெறி தாக்குதலில் ஈடுபட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!