கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை

கேரளாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். கொச்சியில் நேற்று இடது ஜனநாயக முன்னணி கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு, உரையாற்றிய அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்தாண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக 486 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதே போன்ற தாக்குதல் கேரளாவிலும் நடைபெற வேண்டும் என சங்க பரிவார்கள் எதிர்ப்பார்ப்பதாக சாடிய அவர், பிற மாநிலங்களை போல் அல்லாமல் கேரளாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!