பெட்ரோல் – டீசல் உயர்வை கண்டித்து போராட்டம்

 

பெட்ரோல் – டீசல் உயர்வை கண்டித்து திமுகவினர் சட்டமன்றம் முற்றுகை போராட்டம் தொடங்கியது. தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் – டீசல் உயர்வை கண்டித்தும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றிற்கு காரணமான ம்த்திய அரசு மற்றும் மாநில என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் திமுகவினர் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா சிலையில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டுள்ள பேரணியில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள்  அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!