கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்க கூடாது – மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் , மாணவர்களை கட்டணம் செலுத்தாத காரணத்துக்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால், சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது கல்வி அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெறப்படும் புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!