லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவாளர் கைது

திண்டிவனம்  பத்திரப் பதிவுத்  துறை இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவாளர் உட்பட 2 பேரை கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ் என்பவரது மகன் பிரகாஷ். இவர் தனது தந்தையின் பெயரில் உள்ள குடும்ப சொத்தை தான செட்டில்மென்ட் பெறுவதற்காக திண்டிவனம் பழைய நீதிமன்றம் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் தற்பபொழுது பதிவாளராக   பணியில் இருந்த  சங்கரலிங்கம் என்பவர் தான செட்டில்மெண்ட் பத்திரத்தை பதிவதற்கு ரூபாய்  50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் .

மேலும் அந்த லஞ்சப் பணத்தை பத்திர எழுத்தர் சரவணன் மூலம் பெற்றுள்ளார் .இந்த தகவல் அறிந்து அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் மற்றும் ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீரென்று பத்திரப் பதிவு அலுவலகத்துக்குள் சென்று கையும் களவுமாக பிடித்து கதவை சாத்திக் கொண்டு பத்திரப் பதிவாளர் சங்கர லிங்கத்திடம்  5 மணி நேரம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு பின்பு சங்கரலிங்கம் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

 

Translate »
error: Content is protected !!