கூடுதல் இவிஎம் இயந்திரங்கள் வரவழைப்பு…

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த  கூடுதலான இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படுவதால் கர்நாடக மற்றும் தெலுங்கான மாநிலத்தில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதற் கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் இதில் 232502 வாக்களார்கள் உள்ளனர். இரண்டாம் கட்டமாக புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் இதில் 4,31191 வாக்களர்கள் உள்ளனர். மூன்றாம் கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம், வில்லியனூர் நகராட்சிக்கு நடத்தப்படும் இதில் 328555 வாக்களர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்த  கூடுதலான இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படுவதால் கர்நாடக மற்றும் தெலுங்கான மாநிலத்தில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!